நல்லூரில் தங்கச் சங்கிலி அபகரித்த பெண் கைது!!

நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற நிலையில்...

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு: நாடு முழுவதும் சோதனை !

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு தற்போது திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய...
Ad Widget

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று (ஞாயிற்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 668,012ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு ஆயிரத்து 113 பேர் வைத்தியசாலைகளில்...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்று (15) திங்கட்கிழமை 01 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஊடகவியலாளர் என அடையாளம் காட்டி போராட்டத்தை திசை திருப்ப முயற்சி!

ஊடகவியலாளர் என அடையாளம் காட்டி, உள்நாட்டு விசாரணையை வலியுறுத்த கோரியோர் விரட்டியடிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம் ஆரம்பமாகவிருந்த இடத்தில் இவ்வாறு தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளம் காட்டி, போராட்டத்தை திசை திருப்ப முற்பட்டவர்களே இவ்வாறு காணாமல்...

தீர்வை வழங்குவதாக வாக்கெடுப்பிற்கு முன்னர் ரணில் உறுதியளித்தார் என்கின்றார் விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணியை திரும்பப் பெறுவதற்கும் அவர் இணங்கியதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி...

உறவுகளின் தொடர்போராட்டத்திற்கு இன்றுடன் 2000 நாட்கள்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்தக்...

சீனாவில் புதிய வகை வைரஸ்!!

சீனாவில் கொவிட்-19 வைரஸ் போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும்...

மின்சாரக் கட்டண உயர்வினால் 50000 கோடி வருமானம்!!

மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் வருமானம் மாதாந்தம் 50000 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது இலங்கை மின்சார சபை மாதாந்தம் 60000 கோடி ரூபா வரையில் நட்டமடைந்து வருகின்றது. தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட காரணிகளினால் ஆண்டு தோறும் மின்சார சபை...

மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் புதிய உறவு

துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் போக்கு தொடங்கியதில் இருந்தே பல்வேறு மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் மற்றும் இராஜதந்திர உறவு முறிவு ஆகியவற்றை அறிவித்து வருகின்றனர்....

இனி Full Tank எரிபொருள் வழங்க தீர்மானம்!!

பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக (Full Tank) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் முழுமையாக பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது. மேலும், இந்த தீர்மானத்தின் மூலம் பல நாட்கள்...

யாழ்ப்பாண நகரத்தில் பொருட்களை மலிவாக பெற்றுக்கொள்ளலாம்! -யாழ் வணிகர்கழகம்

கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதில் முரண்பாடுகள் காணப்படுகின்றதென யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக...

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் . இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசியை ஒரு வருடத்துக்கு முன்னர்...

9 வருடங்களின் பின்னர் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள்...

பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் : அரசாங்கம்

பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட...

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

நேற்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி 12.5 கிலோ 246 ரூபாயாலும் 5 கிலோ 99 ரூபாயாலும் 2.2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் இன்று தீவிர பாதுகாப்பு!

கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கலவர தடுப்பு...

இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க உக்ரைன் பெண்கள் செய்யும் காரியம்!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருகிறது. இந்நிலையில், தமது நாட்டு படையினர் துணிச்சலாகப் போராடி, மன உறுதியை உயர்த்திக் கொள்ள, உக்ரைன் நாட்டுப் பெண்கள் ஒரு வித்தியாசமான யோசனையை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, உக்ரைன் பெண்கள் தங்கள்...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்!!

எரிசக்தி அமைச்சு பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி சேவை தொழில்களில் ஈடுபடும் வாகனங்களுக்கான மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கொண்டுள்ளார் . மாகாண சபைகளின் உதவியுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் (NTC) ஒவ்வொரு பிரிவிற்குமான தேவைகளை இனங்கண்டு, எரிபொருள் தேவைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டது....

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமையை கண்டித்து வடக்கில் போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ வதிவிடம் ஆகியவற்றில் கடந்த 30ஆம் திகதி இரவு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு 65 லீட்டர் எரிபொருளை மீட்டு இருந்தனர். அலுவலக மின்...
Loading posts...

All posts loaded

No more posts