Ad Widget

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடும் மோதல் – ஒருவர் பலி

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி - மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (07) இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில் ஹபராதுவ - ஸ்வாலுவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்....

உக்ரைனில் போரிட கைதிகளை ஊதியத்திற்கு களமிறக்கும் ரஷ்யா

உக்ரைனில் சிறை கைதிகளை களமிறக்கி போரை நீட்டிக்கும் முயற்சியில் ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கைதிகள் உக்ரைனில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு உயிருடன் திரும்பி வந்தால் அவர்களின் தண்டனைக் காலம் இரத்து செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிறைகளில் இருந்தே தற்போது கைதிகளை தெரிவு செய்து வருவதாக...
Ad Widget

திங்கட்கிழமை முதல் பாண் உற்பத்தி செய்ய முடியாத நிலை!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ள என யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வெதுப்பக உரிமையாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இயற்கை...

பம்பலப்பிட்டியில் எரிபொருளுக்காக காத்திருந்தவர் உயிரிழப்பு!!

கொழும்பு - பம்பலப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் இன்று (07) உயிரிழந்துள்ளார். வரிசையில் காத்திருந்த குறித்த நபர் திடீர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 62 வயதுடைய புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவராவார். சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(08) முதல் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார். பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் அதிகரித்து உள்ளது. இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் நேற்றைய தினம் புதன்கிழமை பத்து துவிச்சககர...

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு?

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில்...

கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்!!

பத்தரமுலையில் உள்ள குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளார். கடவுச்சீட்டு பெற வந்த ஹட்டனை சேர்ந்த பெண்ணுக்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது. வரிசையில் நின்று பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்த இராணுவ வீரர்கள், அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். அதற்குள்...

வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானம்!!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல சீலமானாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். கிராம அலுவலர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்...

திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் கைது!!

பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின்...

காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!!

யாழ்.காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பம்பி பழுதடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். நேற்று காலை காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும்...

உச்சக்கட்ட போர் பதற்றம் – அணு ஆயுதங்களை மேம்படுத்தும் உக்ரைன்

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன், அணு ஆயுதங்களை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. உலகின் மிக அழிவுகரமான ஆயுதத்தை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்தினால்தான், ரஷ்யாவின் படையெடுப்பு எதிர்காலத்திலும் தொடராது என்று உக்ரைன் கருதுகிறது. லாஃப்பரோவில் உள்ள சர்வதேச வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் டாக்டர் பால் மாட்ரெல், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அணு ஆயுதக்...

சீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு!!

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பக்கெட் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, சீமெந்து பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது. ஒரு வருட காலத்திற்கு முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து பக்கெட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து...

பெற்றோல் கப்பலுக்கான முற்பணத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை!!

பெற்றோல் கப்பலுக்கான முற்பணத் தொகையை இன்று செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் இன்று இதனை அறிவித்தார். எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலுக்கான கொடுப்பனவே இவ்வாறு செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் குறித்த கப்பலை முன்கூட்டியே கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....

தொண்டமனாறு பகுதியில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!

தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த கைது நவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்....

எதிர்காலத்தில் மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்படும் – ரணில்

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் தொகை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பல நாள் மீன்பிடி கப்பல்களுக்கு டீசல், எரிவாயு, மளிகை பொருட்கள் மற்றும் ஐஸ் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். கடற்றொழில்...

யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றது. இன்று காலை யாக பூஜையைத் தொடர்ந்து மகாபூர்ணாகுதி, தீபாராதனை, விசேஷ பூஜை என்பன இடம்பெற்று, வேத ஸ்தோத்திர, திருமுறை, நிருத்திய கீத வாத்ய உபசாரங்களுடன் கும்பங்கள் புறப்பட்டு வீதிப்பிரதட்சிணமாக வந்து...

நெருக்கடிக்குள் மக்களை தொடர்ந்தும் தள்ளாமல் ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் – பேராயர்

நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின்போது நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, சஜித் தரப்பினர் உடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. நாட்டை கட்டி எழுப்புவதுற்கு நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஸ்திரமான சர்வ கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதே நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது...

கொரோனா வைரஸின் பதிய திரிபு பரவும் அபாயம் – 4 தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்து

கொரோனா வைரஸின் பதிய திரிபு மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி...

முப்படையினரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும்...
Loading posts...

All posts loaded

No more posts