Ad Widget

இலங்கையில் நாளுக்கு நாள் உச்சம் தொடும் துவிச்சக்கர வண்டி விலை

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இருப்பு தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகளை நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக சாதாரண...

ரஷ்யா மீது கை வைத்தால் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் – எச்சரிக்கும் முன்னாள் சுவில் தூதர்

ரஷ்யா மீது கைவைத்தால், பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கும் முன்னாள் சுவிஸ் தூதரான Yves Rossier உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் மீதும் தவறு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். ரஷ்யாவை காயப்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவும் தயாராக...
Ad Widget

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை என்னால் மாற்றியமைக்க முடியும்!! – பிரதமர் ரணில்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார். அல்ஜசீராவிற்கான பேட்டியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். 2023 கடினமானதாகயிருக்கப்போகின்றது ஆனால் 2024இல் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அல்ஜசீராவிற்கு வழங்கிய...

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் வருவாயை நோக்கியே...

மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகப்பும் இல்லை!! விசேட கொடுப்பனவு தொடர்பிலும் அவதானம்!

எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விசேட கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இதற்கு முன் 30 இலட்சமாக...

வாகனம் வைத்திருக்கும் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியையடுத்து பல்வேறு மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய, வீடுகள் மற்றும் வீதியோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடப்படுவது தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சில பிரதேசங்களில் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் இருந்து எரிபொருள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தாங்கிகளின்...

உக்ரைனில் தாக்குதலை தொடர வேண்டும் – படைகளுக்கு புடின் உத்தரவு

லிசிசான்ஸ்க் நகரை ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து, உக்ரைனில் தாக்குதலை தொடர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். "முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின்படி" தங்கள் நோக்கங்களைத் தொடர மற்ற முனைகளில் உள்ள படைகளுக்கு புடின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, லுஹான்ஸ்க் பகுதி முழுவதும் இப்போது ரஷ்ய கைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிராந்தியத்தின்...

இந்த நாடு ஒரு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது!!

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் 74 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் மக்களை தம்முடைய வாக்குகளுக்காக பாவித்தார்கள் ஆனால் இந்த...

எரிவாயுவை ஏற்றியக் கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் – லிட்ரோ

இலங்கைக்கு நாளை (புதன்கிழமை) வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும்...

வட்டுவாகலில் நேற்று பதற்றம் : இராணுவம் குவிப்பு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியது. வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்குரிய ஏற்பாடாக முல்லைத்தீவு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ஆண்டு...

எரிபொருளை பகிர்ந்தளிக்க இராணுவம் முழு ஒத்துழைப்பை வழங்கும் – யாழ் கட்டளைத் தளபதி

பொது மக்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு இராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர ஜால்மர் தெரிவித்தார். யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர ஜால்மர் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினை இன்று திங்கட்கிழமை யாழ் ஆயர் இல்லத்தில் உத்தியோகபூர்வமாக...

வடக்கில் அல்லது தெற்கில் ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம்!!

வடக்கில் அல்லது தெற்கில் ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம் என தெரிவித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளமைக்கு ஜேவிபியும் முன்னிலை சோசலிச கட்சியும் தங்கள் கண்டணங்களை வெளியிட்டுள்ளன. 22 ம் திகதி பாதுகாப்புசெயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொலிஸ்மா அதிபர் ஐந்தாம் ஆறாம் திகதிகளில் கரும்புலிகள் தினத்தை நினைவுகூறும் வகையில் வடக்கில் அல்லது தெற்கில்...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனிமேல் டோக்கன் முறை இல்லை – எரிசக்தி அமைச்சர்

எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் வரிசையில் நிற்பதில் இருந்து விடுவிப்பதற்காகவும் ஜூலை 11 அல்லது 15ஆம் திகதிகளில்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம்!! இவ்வருட பரீட்சை ஒத்திவைக்கப்படும்!!

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும்...

எரிபொருள், எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு! – ஜனாதிபதி

எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சுயேட்சை உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்...

சிறுவனின் உயிருக்கு எமனாக வந்த ரம்புட்டான்

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது. வலிகாமம் கிழக்கு திடீர்...

நாடளாவிய ரீதியில் இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இணையவழியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் !

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது. மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை...

இலங்கைக்கு பெரும் தொகை பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்யவுள்ள ஐஓசி நிறுவனம்

அமைச்சரவையின் அனுமதியின் அடிப்படையில், 90,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசலை எதிர்வரும் 7, 13 மற்றும் 15ஆம் திகதிகளில் இலங்கைக்குக் கொண்டுவரவுள்ளதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை, ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்க இந்திய எண்ணெய் நிறுவனமான 'ஐஓசி' திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள...

எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள்! முற்றாக முடங்கும் நாடு

எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் உயர்மட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும், அதனூடாகவே சர்வதேசம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்து வரும்...
Loading posts...

All posts loaded

No more posts