Ad Widget

வடக்கில் அல்லது தெற்கில் ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம்!!

வடக்கில் அல்லது தெற்கில் ஐந்தாம் ஆறாம்திகதிகளில் குண்டுகள் வெடிக்கலாம் என தெரிவித்து பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளமைக்கு ஜேவிபியும் முன்னிலை சோசலிச கட்சியும் தங்கள் கண்டணங்களை வெளியிட்டுள்ளன.

22 ம் திகதி பாதுகாப்புசெயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் பொலிஸ்மா அதிபர் ஐந்தாம் ஆறாம் திகதிகளில் கரும்புலிகள் தினத்தை நினைவுகூறும் வகையில் வடக்கில் அல்லது தெற்கில் குண்டுகளை வெடிக்கவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டை சுமத்துவதே இதன் நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் வெளிநாட்டு தூதரக பணியாளர்களையும் இந்த இரண்டு நாட்களும் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவேண்டாம் எனஎச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கிடைத்த தகவல்கள் குறித்த விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும்,அப்படி வெளிப்படுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான முயற்சியே இது என அவர் தெரிவித்துள்ளார்.ஜேவிபியும் ஏனைய குழுக்களும் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என பொலிஸ்மா அதிபர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் என ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின்ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு பதில் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அரசியல் இயக்கங்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயல்கின்றது அல்லது அவ்வாறான நிலைமையை உருவாக்க விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts