Ad Widget

பஸ்ஸில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்ப்பாண பொலிஸார்!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பஸ்ஸில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வங்கியில் 96 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு குறித்த பஸ்ஸில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார். அவர் யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது...

வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய எரிபொருளை வழங்க திட்டம்!

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு...
Ad Widget

குறைந்த விலையில் பயோ பெட்ரோல் மற்றும் பயோ டீசல்! யாழில் ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர் தகவல்

இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெட்ரோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்துள்ளார். நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் நேற்றைய தினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய்/வேப்பெண்ணெய்,...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண் பதில் அதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!!

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும்...

ரஷ்யா பலத்த சேதத்தை சந்தித்துள்ளது – பிரித்தானியா உளவுத்துறை தகவல்

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய மற்றும் ரஷ்ய ஆதரவு படைகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் போராளிகள் மட்டும் அதன் படையில் 55 வீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அண்டை நாடான லுஹான்ஸ்க் முழுவதையும் கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் கவனம் செலுத்தி, லைசிசான்ஸ்க் நகரைச் சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்டதாக உக்ரேனியத்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : இறப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் நிலச்சரிவுகள் மற்றும் பல வீடுகள் சேதமடைந்தமையை காணொளிகள் காட்டும் அதேவேளை மீட்பு நடவடிக்கையும் தொடர்கின்றன. தொலைதூர பகுதிகளில், இருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதேவேளை...

தம்மிக்க பெரேரா எம்.பியாகப் பதவியேற்பு!!

பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பதவி விலகல் காரணமாக ஏற்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக, தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனத்தையும் வரி...

எரிபொருளுக்கு காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!

எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி இருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம்...

மின் துண்டிப்பு நேரத்தில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்பு பட்டு உள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி குடாரப்பு பகுதியில் மின் தட வழியில்...

சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட், நூடில்ஸ் விலைகள் அதிகரிப்பு!

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது....

இலங்கை 30 வருடங்களின் பின் சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றி சாதனை!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற இலங்கை, 30 வருடங்களின் பின்னர் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுடனான தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு!

பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில், பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும்...

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் – பிரித்தானியா

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், உக்ரைனில் இருந்து ரஷ்யா முழுமையாக வெளியேறும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்யாவை தங்கள் எல்லையிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதற்காக உக்ரைனுக்கு...

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

பண்டாரகம பிரதேசத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள ஒன்றரை நாள் நீண்ட வரிசையில் காத்திருந்து வீடு திரும்பிய பின்னர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி பண்டராகமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக சென்று வீடு திரும்பிய பின்னரே...

சுகாதார ஊழியர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

சுகாதார ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள செல்லக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ருவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி, எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிலையங்களின் விபரங்கள்…

கூட்டமைப்பினரை பகிரங்கமாக எச்சரித்தார் சரத் வீரசேகர!!

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர்...

இனப்பிரச்சினைக்கு தீர்வை காணத்தவறியதாலேயே நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது- சம்பந்தன்

நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீர்க்கப்படாத பிரச்சினை சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் தவறவிட்ட பல வரலாற்று...

யோகா தின நிகழ்வில் ரணில் பங்கேற்பு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காலில் முள் குத்தி சிகிச்சைப் பெற்ற இளைஞன் உயிரிழப்பு!

காலில் முள் குத்தியதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த 28 வயதுடைய தருமராசா மதிகரன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி வைத்திய சாலையில் சிகிச்சை...

போர் காலத்தில் புதைக்கப்பட்ட 7 பரல் மண்ணெண்ணெய் மீட்பு!!

போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் முல்லைத்தீவு உடையார் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையை அடுத்து...
Loading posts...

All posts loaded

No more posts