Ad Widget

காலில் முள் குத்தி சிகிச்சைப் பெற்ற இளைஞன் உயிரிழப்பு!

காலில் முள் குத்தியதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த 28 வயதுடைய தருமராசா மதிகரன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Posts