மேலும் 18 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரூம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் 4 நபர்கள், தனி நபர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின்...

பிரபாகரனின் தீர்க்கதரிசனம் இன்று இலங்கையில் இடம்பெறுகின்றது – சிறீதரன்

எங்கள் மீது நீட்டப்படும் துப்பாக்கிகள் என்றோ ஒருநாள் சிங்கள மக்கள் மீது திரும்பும் என்று அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார். அவரது வார்த்தைகள் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
Ad Widget

மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவுநேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் நாடாளுமன்ற...

மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது முகக்கவசம்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல்...

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ்....

ஏப்ரல் 25ஆம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம்

எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு எரிவாயு விநியோகச் சங்கிலியில்...

இன்றும் நாளையும் மின் விநியோகத்தடை!!

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மின்னுற்பத்தி நடவடிக்கைக்கு தேவையான போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை...

திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!!

திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் நேற்று மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று...

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை!

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் ஒன்றின் மூலம்...

இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்க தயார்!! – இந்திய தூதரகம் விளக்கம்

இலங்கை மக்கள் விரும்பினால், இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க இந்தியா தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள ருவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என இந்தியா தெரிவித்துள்ளதுடன், அதனை கடுமையாக சாடியுள்ளது. இலங்கை மக்கள் இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு மாநிலமாக அறிவிக்க தயார்- அதற்கு பதிலாக...

ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறேன் – ஜனாதிபதி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ரம்புக்கனை சம்பவம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை பொலிஸ் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும்...

யாழில் ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் இவ்வாறு உயிரிழந்தார். சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல்...

பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!!

நாட்டில் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சேவைகள் இடம்பெற்ற போதும் காலை 6.30 மணிக்கு வந்த அறிவிப்பையடுத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இன்று நாடுமுழுவதும் கடையடைப்புக்கு 300 தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தன. இந்த நிலையிலேயே இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் குழு நியமனம்

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது...

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என தகவல்!

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும்...

அதிகரித்தது பஸ் கட்டணங்கள்!!

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தாமான பஸ் கட்டணங்கள் 35 வீதத்தினால் அதிகரித்துளளதாக தேசிய போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 35% அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ. 20 இலிருந்து 7 ரூபாவினால் அதிகரித்து 27 ரூபாவாக...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மற்றும் உணவுப் பொதியின் விலைகளும் அதிகரிப்பு

பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை...

கோதுமை மாவின் விலையும் அதிகரிப்பு !

கோதுமை மாவின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் செரண்டிப் நிறுவனம் விலை உயர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோல் 84 ரூபாயினாலும் டீசல் 113 ரூபாயினாலும் அதிகரிப்பு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை திருத்தம் இன்று (ஏப்ரல் 19) முதல் நடைமுறைக்கு வரும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார். இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 84 ரூபாயினால் அதிகரித்து 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 90 ரூபாயினால் 373 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும்....

உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் கட்டாமில்லை – அரசாங்கம்

வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பனவும் கட்டாயம் இல்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்திருந்தார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக...
Loading posts...

All posts loaded

No more posts