Ad Widget

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் குழு நியமனம்

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அத்துடன், காயமடைந்த 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி, மாத்தறை, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, கண்டி, மாத்தளை, இரத்தினப்புரி, கேகாலை, அம்பலாங்கொடை, ஹட்டன், கொட்டகலை, சிலாபம், ஹப்புத்தளை, பண்டாரவளை, எல்பிட்டிய, அநுராதபுரம், மினுவாங்கொட, கெஸ்பேவ, பண்டாரகம, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts