Ad Widget

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 340ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த...

உடனடியாக நாடு முடக்கப்பட்டாலும்கூட விதியை மாற்ற முடியாது – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும்கூட, எதிர்வரும் 10 நாட்களில் கொரோனா வைரஸ் பரவும் விதியை மாற்ற முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ்...
Ad Widget

அத்தியாவசிய பணியாளர்களைத் தவிர வேறெரும் மாகாண எல்லைகளைக் கடக்க முடியாது – இராணுவத் தளபதி

மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு இன்றுமுதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 150 பேரில் இருந்து திருமணத்துக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை 50...

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி...

பால்மா மீதான அனைத்து இறக்குமதி வரிகளும் நீக்கம்!!

இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன் அமைச்சரவை பேச்சாளர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக்...

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே...

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் – அரசாங்கம்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின் எண்ணிக்கை 5000 ஆக உயரும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை...

அன்னதானத்தில் கலந்து கொண்டவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அவசர வேண்டுகோள்!!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய அன்னதான மடத்தில் உணவு பரிமாறுபவருக்கு கொரோன தொற்று உறுதியானது. செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் (8) ஆரம்பித்தது. இதை முன்னிட்டு ஆலயச்சூழலில் உள்ளவர்கள், ஆலயத்துடன் தொடர்புடையவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கச்சான் வியாபாரிகள் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். சந்நிதியின் மோகன் அன்னதான மடத்தின்...

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்...

கொரோனா வைரஸினால் மேலும் 111 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 953 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 111 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 56 ஆண்களும் 55 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை – ஹேமந்த ஹேரத்

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என்றும் தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது....

தடைகளைத் தாண்டி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் பேரணி!!!

24 வருட அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ். நகரில் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து யாழ். நகர வீதி வழியாக...

செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை

திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என கடந்த வாரம் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார். அத்தோடு பாடசாலைகளை திறப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்த நிலையில் கல்வி...

யாழ்.கீரிமலைக்கு சென்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு!!

ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு அதிகளவான மக்கள், யாழ்.கீரிமலை பகுதிக்கு பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றிருந்தனர். கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஒன்றுக்கூடியமையினால் அப்பகுதிக்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் அன்டிஜன் பரிசோதனையை சுகாதார பிரிவினர் முன்னெடுத்திருந்தனர். சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் அச்சத்தில் வாழும் வவுனியா மக்கள்!!

வவுனியா- மதவுவைத்தகுளம் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காண முடியாத வகையில், உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு நிர்வாணமாக, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும், வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகாெள்ள...

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!!

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல்போன இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, பண்ணை பாலத்தடியில் நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தவேளையிலேயே தவறி விழுந்து காணாமல்போயுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் சுமார்...

“ஒருவேளை நாடு சில நாட்களுக்கு மூடப்படும்” – ஆளும் கட்சி எம்.பி.

கோவிட் -19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் சில நாள்களுக்கு நாடு மூடப்பட வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்தார். நாட்டில் கடினமான பொருளாதார நிலமை இருந்தபோதிலும், மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க கடினமாக இருந்தாலும் கூட அத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் ஊடகங்களிடம்...

உடன் பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பியுங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர்

நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் அதிகரிப்பு மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரித்துள்ளனர். அதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுள்ள கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியுமான என்பது கேள்விக்குறியாகவுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலைமைகள் மற்றும் கொவிட்...

டெல்லி செல்லத் தயாராகும் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ்த்...

நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால், 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும்!!

கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல் துறை பரிந்துரைத்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் பரிந்துரை, சோதனைகளை மேற்கோள் காட்டி அத்துறையின் பணிப்பாளர், வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள...
Loading posts...

All posts loaded

No more posts