Ad Widget

மாணவர்களின் இணையவழிக் கற்றலுக்கு கட்டணமின்றிய இணைய வசதி – நாமல்

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் எந்தவொரு இணைய கட்டணமும் இன்றி இணையவழிக் கற்றலில் ஈடுபட உதவும் இ-தக்ஸலவா திட்டத்தை விரைவுபடுத்துமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான நமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய இ-தக்ஸலவா அமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க...

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்துள்ளது. இந்த சம்பவத்தினால் 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். அதாவது நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை, கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியுள்ளது. இதில்...
Ad Widget

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, ‘மக்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும்...

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு?

எரிபொருளின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அ​கில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையிலும் சில பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திகளின் விலையை அதிகரித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். எரிபொருள் விலை போன்று பேக்கரி உற்பத்திக்கு தேவையான ஏனைய மூலப்பொருட்களின் விலையும்...

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்? – சி.வி.கே

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த கட்டடத்தை மாகாண சபைக்கு கையளிக்க வேண்டும் என்ற தீர்மானம் வட மாகாண சபையில்...

யாழில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு- மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தற்பொழுது...

கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் பலி!!

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. அதனால் பேருந்தில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது....

நாட்டில் கோவிட்-19 நோயினால் மேலும் 101 பேர் சாவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐத் தாண்டியது!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 11 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில்...

அத்தியாவசிய சேவைகள், தொழில் நடவடிக்கைகள் சிலவற்றுக்கு பயணத்தடை காலத்தில் அனுமதி

பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் உள்பட பல சேவைகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். அதன்படி, ஆடைத் தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழில், இயற்கை உர உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவை சுகாதார பரிந்துரைகளின் கீழ் அனுமதிக்கப்படுகின்றன. வங்கி மற்றும் பொருளாதார மையங்களின் இயங்குவதற்கான திகதிகள்...

யாழில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு!!

கொக்குவில் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை மீறி யாழில் பெரும்பாலானோர், பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆகவே இத்தகையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காகவே இந்த விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பயணத் தடையை மீறி செயற்பட்ட சிலர்...

வடக்கு கடலினுள் பேரூந்துகள் – கடல் வளத்தினை அதிகரிக்க முயற்சி

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில்...

நாட்டில் எரிபொருள் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நாட்டின் கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறு பயணத்தடையை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, இந்தியாவில் பரவும் கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு இலங்கையில் கண்டறிவு!!!!

இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் வேகமாகப் பரவும் பி .1.1.7 கோவிட்-19 புதிய திரிபு வைரஸ் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாபிட்டி, வாரியபொல, மாத்தறை, ஹபரதுவா, திசாமஹராம, கராபிட்டி மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்த நபர்களிடம் பெற்றப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ...

மன்னாரில் கரையொதுங்கும் X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(வியாழக்கிழமை) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பிலேயே சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும்...

கஞ்சாவை திருடி விற்றதாக பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இணைந்து கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கபெற்றதன் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீட்கப்படும் கஞ்சா...

சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்து குழந்தை வைத்தியர் விளக்கம்!

சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர்...

முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது யாழ்.போதனா வைத்தியசாலை!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன்...

பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படுவதாக அறிவிப்பு!!!

தற்போது நடைமுறையிலுள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts