Ad Widget

ஸ்கந்தா நடை நிகழ்வு

சுன்னாகம் ஸ்கந்த வரோதயாக் கல்லூரியின் 120 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்கந்தா நடை நிகழ்வு இன்று நடைபெற்றது.

sckantha

காலை 8.30 மணிக்கு சுன்னாகம் நாகம்ஸ் திரையரங்கில் ஆரம்பித்த நடை பாடசாலை முன்றலை சென்றடைந்தது. எதிர்கால பசுமையான சூழலை நோக்கி என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து பாடசாலையின் முன்னாள் அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

skanda

skanda3

Related Posts