Ad Widget

ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களை எட்டி உதைத்தது போல் உள்ளது! – சுமந்திரன்

இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ சுமந்திரன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், கடுமையான யுத்த குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களுக்கு செய்த அவமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எம்.ஏ சுமந்திரன் எமது செய்தி பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போது, ஷவேந்திர சில்வாவிற்கு எதிராக சர்வதேச அறிக்கைகள் பல குற்றம் சுமத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களை எட்டி உதைத்தது போல கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts