Ad Widget

விசேட வைத்திய நிபுணர்களுக்கு புதிய சட்டம்

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களை பரிசோதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள், நோயாளர்களுடன் குறைந்தபட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நோயாளர்களுடன் நேரத்தை செலவிடுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட கருவி ஒன்றும் வைத்தியசாலைகளில் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts