Ad Widget

வரிதிருத்தம்: வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும்!!

மே மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறு திருத்தப்படும் என குறிப்பாக கூறமுடியாது என அதன் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

எனினும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் சந்தையில் காணப்படும் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றை நிலவரப்படி வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதரா நிலைமையும் இதனை பாதித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts