Ad Widget

வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

தென்னிலங்கையில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற வன்முறையில் முஸ்லிம் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற கலகத்தின்போது படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தார்.

குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கும்பல் ஒன்று அவரை கூர்மையான ஆயுதங்களுடன் தாக்கியமை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் இது கலகத்தின்போது ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Related Posts