Ad Widget

வடபகுதிக்கும் பாப்பரசர் விஜயம் செய்வார்

பாப்பரசர் பிரான்ஸிஸின் அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயத்தின்போது, வடக்கிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக மன்னாரிலுள்ள ஆயர் இல்ல பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

pop-papprasar

பாப்பரசரின் பாதுகாப்பு பணியாளர்கள் குழு தற்போது இலங்கையிலுள்ள நிலையில், மன்னாரிலுள்ள மடு தேவாலய அதிகாரிகளை நேற்றையதினம் அவர்கள் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பில் மடு தேவாலய நிர்வாக உத்தியோகத்தர், அருட்தந்தை எமலியானுஸ்பிள்ளை கலந்துகொண்டார். பாப்பரசரின் இலங்கைக்கான விஜயத்தின்போது, மடு தேவாலயத்திற்கும் அவர் வருகை தரவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வத்திக்கானிலிருந்து வந்த குழுவினருக்கும் கர்தினால் ரஜ்ஜித்துக்கும் இடையில் நேற்றையதினம் நடந்த கூட்டத்தை அருந்தந்தை எமலியானுஸ்பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், மடு தேவாலயம் மற்றும் வடக்கிற்கு பாப்பரசர் விஜயம் செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் பின்னர் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Related Posts