Ad Widget

வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

train-yarl-thevyதிருகோணமலையில் இருந்து பயணித்த இரவுநேர தபால் ரயில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் அளவில் பொத்துஹார – பொல்கஹவெல இடையே தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து பயணிக்கும் ரயில் பொல்கஹவெல வரையிலும், கொழும்பிற்கு வருகைதரும் ரயில் குருநாகல் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் வடக்கு ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குருநாகல் மற்றும் பொல்கஹவெல இடையில் இன்று காலை முதல் ரயில் நிலையத்தில் இருந்து பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – திருகோணமலை இடையே பயணித்த ரயிலின் இரண்டு பெட்டிகள் இவ்வாறு தரம்புரண்டுள்ளன.இந்த ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கிநிறுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts