Ad Widget

வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் இல்லை!

வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்க பெறவில்லை என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நேற்றயதினம் யாழில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த கால தேர்தலிகளில் வடக்கில் குறிப்பாக யாழில் இருந்து தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் உள்ளதாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்க பெற்றன.

ஆனால் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்க பெறவில்லை” என கூறினார்.

Related Posts