Ad Widget

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் நேற்று (புதன்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேருக்கும் கிளிநொச்சியில் 23 பேருக்கும் வவுனியாவில் மூவருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஆறு பேருக்கும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவருக்கும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சாவகச்சேரி சுகாதாரப் பிரிவில் 28 பேருக்கும் சண்டிலிப்பாய் சுகாதாரப் பிரிவில் ஒருவருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரப் பிரிவில் ஆறு பேருக்கும் கரவெட்டி சுகாதாரப் பிரிவில் ஐவருக்கும் காரைநகர் சுகாதாரப் பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலை மற்றும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தலா ஒருவருக்கும் புதுக்குடியிருப்பு சுகாதாரப் பிரிவில் ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் 38 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கிளிநொச்சியில், கரைச்சி சுகாதாரப் ஆறு பேருக்கும் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஆடை்த தொழிற்சாலைப் பணியாளர்கள் ஒன்பது பேர் உட்பட 16 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், வவுனியா சுகாதாரப் பிரிவில் இருவருக்கும் மாவட்டப் பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வைத்தியசாலையில் இருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts