Ad Widget

வடக்கில் இராணுவ கெடுபிடியை வன்மையாக கண்டிக்கின்றோம் : மாவை

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றாது இராணுவ கெடுபிடிகளை அதிகரிக்கும் அரசாங்கதின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து கலந்துரையாடுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் நீக்கப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ள நிலையில் இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் இது குறித்த விசனங்களை வெளிப்படுத்துமா என வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Related Posts