Ad Widget

யாழ் பள்ளிவாசல் மீது தாக்குதல்

யாழில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றின் மீது இன்று (21) அதிகாலை இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

muslim-jaffna-kammal-palli

யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள எம்.ஓ. வீதியில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசல் மீதே இன்று அதிகாலை ஒரு மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் பள்ளிவாசல் யன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரும் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது நேற்று (20) காலை இனம்தெரியாத நபர்கள் கழிவு எண்ணெய் வீசி தாக்குதல் நடாத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பல பாகங்களிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் யாழிலும் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவத்தால் யாழ். முஸ்லீம் மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts