Ad Widget

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்

fight-warயாழ்.பல்கலைக்கழக இறுதி வருட மாணவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் முதலாம் வருட மாணவர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகாமைத்துவபீட முதலாம் வருட மாணவனான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த புலேந்திரராசா பிரணவன்(வயது24) என்ற மாணவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை விரிவுரை மண்டபத்துக்குள் அடாத்தாக புகுந்து இறுதியாண்டு மாணவர்கள் தன்னைத் தாக்கினர் என்று பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலிற்கான பின்னணி பற்றி தகவல்கள் வெளிவராத போதும் இது தனிப்பட்ட மாணவர்களிடையேயான மோதலின் விளைவான தாக்குதலேயென பல்கலைகழக மாணவர் ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts