Ad Widget

யாழ் இராணுவ கட்டளைத் தளபதி யாழ் மக்களிடம் வேண்டுகோள்!

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற ரீதியில் யாழில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமையானது ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது கட்டுப்பாட்டில் உள்ளது.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் கொரோனா 1வது அலையில் 17 தொற்றாளர்களும் இரண்டாவது அலையில் 890 தொற்றாளர்களும் தற்போதுள்ள மூன்றாவது அலையில் 1,398 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

எனினும் யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற அடிப்படையிலும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி என்ற அடிப்படையிலும் யாழில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பட்ட செயற்பாட்டினை இராணுவத்தினரின் மூலம் முன்னெடுகின்றோம் எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.

அத்தோடு அரசாங்கத்தினால் தற்பொழுது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பயண கட்டுப்பாட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற ரீதியில் தொற்றினை தடுக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருங்கள் அத்தோடு உங்களுக்கு ஏதாவது கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் அவ்வாறு செயற்படுவதன் மூலம் உங்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Related Posts