Ad Widget

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி ஞாயிறன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரதமரின் இணைப்புச் செயலாளர், கீதநாதன் காசிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் கிராம அலுவலக பிரிவு ரீதியில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணி முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படும் இடங்களுக்கு தடுப்பூசி மருந்து வழங்கல் முன்னுரிமையளிக்கப்படும் என்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர், கீதநாதன் காசிலிங்கம் குறிப்பிட்டார்.

Related Posts