Ad Widget

யாழ்ப்பாணத்தில் நேற்று 9,988 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கும் பணியில் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு கடந்த மே மாத இறுதியில் கிடைக்கப்பெற்றன.

இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கோவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன.

அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்ற பொதுமக்களுக்கு இரண்டாவது டோஸை வழங்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது. வரும் ஜூலை 2ஆம் திகதிவரை இரண்டாவது டோஸ் வழங்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

எனவே நேற்றைய முதல்நாள் மாலை வரை 9 ஆயிரத்து 988 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

Related Posts