Ad Widget

யாழ்ப்பாணத்தில் நான்கு பொலிஸார் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அதன்படி யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என்றும் ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என்றும் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

Related Posts