Ad Widget

யாழில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் : 4 பேர் படுகாயம் : சொத்துக்களுக்கு சேதம் !

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவமொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் உள்ள இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள செல்வபுரம் சிவன் கோவிலடியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் வீடொன்றில் தீப் பரவல் ஏற்பட்டதையடுத்து பொலிஸார் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். வன்முறையின் போது வாகனங்கள் உட்பட பெறுமதியான பொருட்களுக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts