Ad Widget

யாழில் யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு, மதிய உணவுகள் பொலிஸாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன.

பயணத்தடை காரணமாக யாழ்.நகரை சூழவுள்ள பகுதிகளிலுள்ள யாசகர்கள், உணவுக்காக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இந்நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள், உணவில்லாமல் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர்.

குறித்த நிகழ்வினை நாளையும் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts