Ad Widget

யாழில் பல இடங்களில் இடியுடன் மழை ; மின்னல் தாக்கி தென்னைகளில் தீ

மணத்தறை லேனில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது.

யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு உள்ளிட்ட இடங்களில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் மணத்தறை லேன் – சிவன் அம்மன் கோயிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்களில் தீப்பற்றி எரிந்தன.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வாகனம் தென்னை மரங்களில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

Related Posts