Ad Widget

யாழில் தாதியர்கள் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில்!!

யாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று காலையில் இருந்து அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டதோடு, யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts