Ad Widget

யாழில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதற்கமை யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவரே நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்

இவரின் சடலம், சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை வரை 5 ஆயிரத்து 390 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts