Ad Widget

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் மாகாணத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொலிஸார், சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 12 இடங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் உடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related Posts