Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் யாழில் ஆரம்பம் !!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (புதன்கிழமை) நினைவேந்தல் அஞ்சலி சுடரேற்றி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்து கண்டிருந்தனர்.

Related Posts