Ad Widget

முன்னறிவிப்பின் பின்னரே சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் சென்றார்!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னறிவிப்புச் செய்துவிட்டே பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றார் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த புதன் கிழமை அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சரியான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தே பரவிபாஞ்சான் இராணுவ முகாமுக்குள் சென்றார். இது தொடர்பில் சிறீலங்கா இராணுவத்தினரால் எந்தவொரு காவல்நிலையத்திலும் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பயணத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த படை அதிகாரிகளுடன் உரையாடியிருந்தார். தனது வருகை தொடர்பாக யாழ் மாவட்ட இராணுவ அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியிருந்தார் எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை. அதனால் எந்தத் தகவலும் காவல்நிலையத்தில் பதியப்படவில்லை.

முக்கிய பிரமுகர்களின் வருகை தொடர்பில், முன்கூட்டியே தெரிவிப்பது பற்றி, கிளிநொச்சி மாவட்ட படை அதிகாரி வடக்கு பிரதி காவல்துறை மா அதிபருடன் தொலைபேசிமூலம் கலந்துரையாடியிருந்தார். அது முறைப்பாடல்ல எனவும் தெரிவித்தார்.

Related Posts