Ad Widget

முதலமைச்சர் விக்னேஷ்வரனை கைது செய்ய வலியுறுத்தல்!

இனவாதம் பேசுபவர்களை கைது செய்வதாயின் முதலில் விக்னேஷ்வரன் மற்றும் சிவாஜிங்கம் ஆகியோரையே கைது செய்யுங்கள் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

பௌத்தர்களுக்கு நல்லிணக்கத்தை கற்றுதர வேண்டியதில்லை. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமே நல்லிணக்கம் என்ன என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts