Ad Widget

முகமாலையில் மேலுமொரு எலும்புக்கூடு மீட்பு

ittavil-elumbukkuduமுகமாலைப் பகுதியிலிருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு இன்று வியாழக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியிலுள்ள கைவிடப்பட்ட காவலரண் ஒன்றிலிருந்து பெண் விடுதலைப் புலி உறுப்பினருடைய எலும்புக்கூடு மீட்கப்பட்ட நிலையில் இன்று (03) இரண்டாவது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்களே மேற்படி எலும்புக்கூடுகளை அவதானித்து, பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனால், இப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்பதினால் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுடன் இணைந்து, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

முகமாலையில் மீட்கப்பட்டது பெண்ணினுடைய எலும்புக்கூடு

முகமாலையில் எலும்புக்கூடு மீட்பு

Related Posts