Ad Widget

மீட்கப்பட்ட துப்பாகி ஜனாதிபதி மைத்திரியை இலக்கு வைத்ததா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை அதுமல்பிடிய வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த துப்பாக்கியைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படும் மருந்து நிரப்பி சுடுவதற்குப் பயன்படுத்தும் நாட்டுத் துப்பாக்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts