Ad Widget

பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மூவர் கைது

ஊர்காவற்றுறைப் பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றின் முன்பாக நின்று பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் மூவர் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்யப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபானசாலையின் முன்பாக நின்று மேற்படி மூவரும் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு சண்டையிட்டுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற பொலிஸாரை தகாத வார்ததைகளால்; மேற்படி நபர்கள் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, மூவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts