Ad Widget

பொதுப்போக்குவரத்தில் 90வீத பெண்களுக்கு பாலியல் தொல்லை!

இலங்­கையின் பொதுப்­போக்­கு­வ­ரத்தில் 90 வீத­மான பெண்கள் பாலியல் ரீதி­யான துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கென சிறுவர் விவ­கார அமைச்சு, போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிர­தமர் அலு­வ­லகம் மற்றும் இலங்­கை பொலிஸ் என்­ப­வற்­றுடன் இணைந்து UNFPA அமைப்பு “அவளின் பயணம் பாது­காப்­பா­னதா?” என்ற தொனிப்­பொ­ரு­ளி­லான பொது­மக்­களை அறி­வூட்டும் ஒரு பிர­சார நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­துள்­ளது என இலங்­கையின் ஐக்­கிய நாடுகள் சனத்­தொ­கைக்­கான நிதியம் அறி­வித்­துள்­ளது.

நிதியம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது பாலியல் துன்­பு­றுத்­த­லா­னது அடிப்­படை மனித உரி­மை­களை மீறு­வ­துடன் பெண்­க­ளையும் சிறு­மி­க­ளையும் உடல் ரீதி­யா­கவும் உள­வியல் ரீதி­யா­கவும் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் பாகு­பாட்­டுக்கு உட்­ப­டுத்தும் ஒரு கலா­சா­ரத்­துக்கும் வழி­வ­குக்­கி­றது. இது உல­க­ளா­விய ரீதியில் பெண்கள் எதிர்­கொள்ளும் ஒரு பிரச்­சி­னை­யாக உள்­ளது.

ஐக்­கிய நாடு­களின் சனத்­தொகை நிதி­யத்­தினால் நாட­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வின்­படி, இலங்கை பொதுப்­போக்­கு­வ­ரத்து பஸ் வண்­டிகள் மற்றும் புகை­யி­ர­தங்­களில் பய­ணிக்கும் 90 சதவீத பெண்­களும் சிறு­மி­களும் பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் 4 சதவீத மானோர் மாத்­தி­ரமே பொலி­ஸா­ரிடம் உதவி வேண்­டி­யுள்­ளதை இந்த ஆய்வு வெளிக்­காட்டி நிற்­கின்­றது. 2015 இல் UNFPA அமைப்­பா­னது இலங்­கையின் ஒன்­பது மாகா­ணங்­க­ளையும் உள்­ள­டக்கும் அனைத்து நிர்­வாக மாவட்­டங்­க­ளிலும் 15 – 35 க்கு உட்­பட்ட பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளி­லி­ருந்­தான 2,500 மாதி­ரி­யெ­டுப்­புக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இந்த தேசிய ஆய்வை முன்­னெ­டுத்­தது. பங்­காளர் கலந்­து­ரை­யாடல், பிர­தான தக­வ­லாளர், நேர்­கா­ணல்கள் மற்றும் வினாக்­கொத்து ஆய்­வுகள் ஊடாக தர­வுகள் சேக­ரிக்­கப்­பட்­டன.

தேசிய முன்­னு­ரி­மையின் அடிப்­ப­டையில் இந்­தப்­பி­ரச்­சி­னையை எதிர்­கொள்­வதில் பெண்கள் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சு, போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிர­தமர் அலு­வ­லகம் மற்றும் இலங்­கைப் ­பொலிஸ் என்­ப­வற்­றுடன் இணைந்து UNFPA அமைப்பு “அவளின் பயணம் பாது­காப்­பா­னதா?” என்ற தொனிப்­பொ­ரு­ளி­லான பொது­மக்­களை அறி­வூட்டும் ஒரு பிர­சார நட­வ­டிக்­கையை ஆரம்­பித்­துள்­ளது. பிர­சார நட­வ­டிக்­கையை ஆரம்­பிக்கும் முக­மாக UNFPA கொழும்பில் ஒரு ஊடக மாநாட்டை நடத்­தி­யது.

இதில் மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சின் மேல­திக செய­லாளர் திரு­மதி அசோகா அள­வத்த, க்ராஸ்­ரூட்டட் ட்ரஸ்ட் இலி­ருந்து திரு­மதி பபா தேசப்­பி­ரிய, இலங்கை பொலி­ஸாரின் சிறுவர் மற்றும் இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பின் தலைவர் எல். ஆர்.அம­ர­சேன, ஐக்­கிய நாடு­களின் வதி­விட ஒருங்­கி­ணைப்­பாளர் ஊனா மொக்­காலே உள்­ளிட்ட பிர­மு­கர்கள் கலந்து கொண்­டனர்.

இந்த ஊடக மாநாட்டில் பொதுப் போக்­கு­வ­ரத்தில் பெண்கள் எதிர்­கொள்ளும் பாலியல் வன்­மு­றைகள் சார்ந்த பிரச்­சி­னைகள் மற்றும் அதற்­கான கொள்­கைப்­ப­ரிந்­து­ரைகள் உள்­ளிட்ட முன்­மொ­ழி­வு­க­ளு­ட­னான கொள்கைச் சுருக்­கத்தை UNFPA வெளி­யிட்­டு­வைத்­தது. UNFPA நிகழ்ச்­சித்­திட்ட பகுப்­பாய்­வாளர் திரு­மதி ஷாரிகா குரே ஆய்வின் பெறு­பே­று­களைப் பற்­றி­ய­தொரு விளக்­கத்தை முன்­வைத்தார். மூன்று வகை­யான தனி நபர்கள் சாத­க­மான மாற்­றத்­துக்கு துணை­யாக இருக்க முடியும் என இந்த முன்­வைப்பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அதில், பாதிப்­புக்கு உட்­பட்­டவர் – விட­யத்தை எடுத்­துக்­கூறல் மற்றும் நட­வ­டிக்கை எடுத்தல், பக்­கத்தில் இருப்­பவர் – தலை­யி­டுதல் மற்றும் உதவி வழங்கல், தவ­றி­ழைத்­தவர் – அவ்­வா­றான எவ்­வித வன்­மு­றை­க­ளையும் செய்­யா­தி­ருத்தல்.

இந்த சமூகப் பிரச்­சி­னைக்­கான தீர்வை காண்­பதன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்தும் வகையில், UNFPA பிர­தி­நி­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள திரு­மதி ரிட்சு நக்கேன் “பொதுப் போக்­கு­வ­ரத்தில் பெண்­க­ளுக்­கெ­தி­ரான பாலியல் வன்­மு­றை­யா­னது பால் நிலை அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றையின் ஒரு வடி­வ­மாகும்.

பால்­நிலை அடிப்­ப­டை­யி­லான வன்­முறைப் பிரச்­சி­னையை பரந்த மட்­டத்தில் எதிர்­கொள்­வ­தற்கு சான்­று­களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்புக்கான தரவுகளை நாம் நாடளாவிய ரீதியில் சேகரிக்க வேண்டும். இந்த ஆய்வானது இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய தரவு சேகரிப்பதற்கானதொரு முதல் படியாகும்” எனக் குறிப்பிட்டார்.

UNFPAயினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பிரசார நடவடிக்கையானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 2017 மார்ச் மாத சர்வதேச மகளிர் தின நினைவு தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகும்.

Related Posts