Ad Widget

பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

attack-attackவலி. தெற்கு, உடுவில் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் முத்துலிங்கம் நவலோகராஜா (வயது 45) மீது இன்று பிரதேச சபைக்கான வாகன சாரதி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

உடுவில் பிரதேச சபைக்கான பஸ் நிலையத்தில் வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சாரதியால் மேற்கொள்ளப்பட்ட முறைக்கேட்டு சம்பவமொன்றினை பிரதேச சபையின் கவனத்திற்குத் தான் கொண்டு வந்ததினையடுத்தே தன்னை தாக்கியுள்ளதாக பிரதேச சபை உறுப்பினரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts