யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி வடக்கு உள்பட்ட மூன்று மாவட்டங்களில் 7 கிராம அலுவலகர் பிரிவுகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலி. வடக்கு பலாலி வடக்கு கிராம அலுவலகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுகிறது.
அந்தக் கிராமத்தில் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம அலுவலகர் பிரிவும் மொனராகலை மாவட்டத்தில் 5 கிராம அலுவலகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படுகின்றன.