Ad Widget

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 15 பேருக்கு கொரோனா!

பருத்தித்துறை ஓடக்கரை பகுதியில் 37 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று வியாழக்கிழமை ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஓடக்கரைக் கிராமத்தில் அண்மைய நாள்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த சிறப்பு பரிசோதனை அங்கு இன்று முன்னெடுக்கப்பட்டது.

Related Posts