Ad Widget

அரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது!! – வடக்கு மாகாண பட்டதாரிகள்

பட்டதாரிகளிடத்தே பாகுபாடு காட்டாமல் தேர்தல் வருவதற்கு முன்னர் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனத்தை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண பட்டதாரிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வந்திருந்த தருணத்தில், பட்டதாரி நியமனங்கள் அனைவருக்கும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வட.மாகாண பட்டதாரிகள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.

இதன்போது பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரை வரவழைத்து பிரதமர் சில நிமிடங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். அப்போது அவர்கள் மகஜர் ஒன்றை பிரதமரிடம் கையளித்தனர்.

சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த வட.மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், “வேலையற்ற பட்டதாரிகள் அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் அல்லர்.

பட்டதாரிகளில் உள்வாரி- வெளிவாரி என்ற பகுபாடு எதற்கு, இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அரசின் உடமை. பின்பு எதற்கு வேறுபாடு.நல்லாட்சி நடைபெறுவதாக அரசு கூறுவது உண்மையாக இருந்தால், இதுவரை பட்டம் பெற்றவர்களுக்கு தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நியமனங்களை வழங்குங்கள்.

முன்னைய அரசு 50 அல்லது 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கிய வரலாறு உண்டு. அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளர்கள் என்று கூறுகின்றார்கள். மேலும் இந்த அரசில் தமிழ் அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை. நியமனத்தை வழங்காது விட்டால், அரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது என்பதை மறவாதீர்கள்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts