Ad Widget

நாட்டில் மேலும் 1,531 பேருக்கு கோரோனா தொற்று

நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

நாட்டில் 2020 ஜனவரி மாதம் முதல் நேற்று வரை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 484 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 95 ஆயிரத்து 445 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 671 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Posts