Ad Widget

நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது.

உலகில் 2 லட்சம. கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட 78ஆவது நாடாக இலங்கை காணப்படுகிறது.

அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டில் இன்று மாலை வரை 2 ஆயிரத்து 280 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 2 லட்சத்து ஆயிரத்து 534 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். ஆயிரத்து 656 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Posts