Ad Widget

நாட்டின் 20 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை!

நாட்டின் 20 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையத்தினால் வெளியிப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அநுராதபுரம், மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை உயர்வாகவே காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Related Posts