Ad Widget

நாடு முழுவதும் இன்று முதல் இரவுநேர பயணத்தடை அமுல் – இராணுவ தளபதி

நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை இரவுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று தொடக்கம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts