Ad Widget

நல்லூர் அரசடி பகுதியை முடக்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் J/103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளது.

நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனால் அரசடி பகுதியில் வசிக்கும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts