Ad Widget

திருநெல்வேலி பாரதிபுரத்தை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 643 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 5 பேருக்கும் , சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்குமாக 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி பாரதி புரம் பகுதி கடந்த மாதம் 28ஆம் திகதி முதலாக 26நாட்களாக தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts