Ad Widget

திங்கள் முதல் ரயில் சேவைகள் இடம்பெறும் – ரயில்வே திணைக்களம்

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த எதிர்வரும் புதன்கிழமை இரவு 10 மணி வரை ரயில் சேவை தொடரும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related Posts